search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயில்- 15ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
    X

    இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயில்- 15ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயிலை, வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். #EnginelessTrain #VandeBharatExpress
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார். இத்தகவலை ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.

    ‘டெல்லியில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின்போது, காலை 10 மணியளவில் என்ஜின் இல்லா ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த ரெயில், ரெயில்வேயின் முதல் உள்நாட்டு தயாரிப்பு என்பது பெருமைக்குரிய விஷயம்’ என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.



    இந்த ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும்.

    டெல்லி மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தின்போது, இந்த என்ஜின் இல்லா ரெயில் 180 கிமீ வேகம் வரை சென்றது. இதன்மூலம் இந்தியாவின் அதிவேக ரெயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #EnginelessTrain #VandeBharatExpress
    Next Story
    ×