search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்திய விமானப்படை தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்
    X

    இந்திய விமானப்படை தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்

    • ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் விமானப்படை துணைத் தளபதியாக உள்ளார்
    • தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி பணி பெறுகிறார்

    இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் - களையும் வகித்தவர் ஆவார்.

    Next Story
    ×