search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் மந்திரி குறித்து அவதூறு கருத்து: கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவி கைது
    X

    பெண் மந்திரி குறித்து அவதூறு கருத்து: கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவி கைது

    • பெண் மந்திரியை நோக்கி பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக புகார் அளித்தார்.
    • கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    கர்நாடக சட்டசபையிலும் இதுதொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. மாநில தலைவரும், மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசினார்.

    இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, பெண் மந்திரியை நோக்கி சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொட்ரபாக, லட்சுமி ஹெபால்கர் அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், லட்சுமி ஹெபால்கர் அளித்த புகாரின் பேரில் சி.டி.ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சி.டி.ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்ததால் சட்டசபை வளாகத்தில் வைத்தே குண்டுக்கட்டாக அவரை போலீசார் கைதுசெய்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×