என் மலர்
இந்தியா

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்கு
- கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த 11-ந்தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய பெரிய விளம்பரப்பலகைகளை வைத்து மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியதாக அப்போதைய முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் சிலர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை கடந்த 2022-ம் ஆண்டு நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதைத்தொடர்ந்து கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த 11-ந்தேதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story