என் மலர்tooltip icon

    இந்தியா

    தாய்லாந்து, மியான்மருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி
    X

    தாய்லாந்து, மியான்மருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி

    • தாய்லாந்து, மியான்மரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • மிகப்பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானதாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்கள் சிட்டுக்கட்டு போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவலில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிழைலயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலை கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்.

    இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. +66618819218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×