என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்- தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கினார்
- விசாகப்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார்.
- ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார். போதை தலைக்கேறியதால் திடீரென அந்த பெண் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட போலீசார் இளம்பெண்ணிடம் சென்று நீங்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
அப்போது பீர்பாட்டில் உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்த் என்பவர் கண்ணில்பட்டு காயமடைந்தார். போலீசார் கோவிந்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இளம்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்