search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. டெல்லி வரை நில  அதிர்வு  ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
    X

    பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. டெல்லி வரை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்

    • டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
    • இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

    பாகிஸ்தானில் இன்று மதியம் 12.58 மணியளவில் 5.8 ரிக்கர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வானது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.நில அதிர்வைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறிய மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

    பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதனங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×