என் மலர்
இந்தியா

டெல்லி சென்றுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்... பதில் கூற மறுத்த எடப்பாடி
- கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த புதன்கிழமை அன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பானது சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூற மறுத்துவிட்டார்.