search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஏஜி நூரானி உயிரிழப்பு
    X

    முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஏஜி நூரானி உயிரிழப்பு

    • முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகி உள்ளார்.
    • ஏஜி நூரானி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியருமான ஏஜி நூரானி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும்.

    சட்டத்துறை ஆய்வாளரான ஏஜி நூரானி- தி காஷ்மிர் குவெஸ்டியன், பத்ருதின் தியாப்ஜி, மினிஸ்டர்ஸ் மிஸ்கன்டக்ட், பிரெஸ்நீவ்ஸ் பிளான் ஃபார் ஏசியன் செக்யூரிட்டி, தி பிரெசிடென்ஷியல் சிஸ்டம், தி டிரையல் ஆஃப் பகத் சிங் மற்றும் கான்ஸ்டிடியூஷனல் குவெஸ்டியன்ஸ் இன் இந்தியா என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    மேலும், பல்வேறு தனியார் நாளேடுகளில் கட்டுரை எழுதி வந்துள்ளார். 1930 ஆம் ஆண்டு பாம்பாயில் பிறந்த ஏஜி நூரானி 1960 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்தார். தான் பிறந்த ஊரிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏஜி நூரானி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகியுள்ளார்.

    ஏஜி நூரானி உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×