என் மலர்
இந்தியா

X
தங்க கடத்தல் வழக்கு- நடிகை ரன்யா ராவின் தந்தைக்கு கட்டாய விடுப்பு
By
மாலை மலர்15 March 2025 8:36 PM IST

- கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நடிகை ரன்யா ராவ் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தங்க கடத்தல் தொடர்பான வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகை ரன்யா, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் தன்னைத் தாக்கி, வெற்று மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
×
X