என் மலர்
இந்தியா

ஜெயலலிதாவுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது பாக்கியம்- பிரதமர் மோடி

- ஜெயலலிதா அவர்களை, அவரது பிறந்தநாளில் நினைவுகூறுகிறேன்.
- மக்களுக்கான செயல்பாடுகளில் ஜெயலலிதா எப்போதுமே மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் பழகிய அனுபவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த இரக்கமுள்ள தலைவரும் சிறந்த நிர்வாகியுமான ஜெயலலிதா அவர்களை, அவரது பிறந்தநாளில் நினைவுகூறுகிறேன். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது பாக்கியம். மக்களுக்கான செயல்பாடுகளில் அவர் எப்போதுமே மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She is widely admired as a compassionate leader and outstanding administrator who devoted her life for Tamil Nadu's development. It is my privilege that I had the opportunity to interact with her on innumerable occasions. She… pic.twitter.com/oPMiT42YPY
— Narendra Modi (@narendramodi) February 24, 2025