search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர்- சித்தராமையா அறிவிப்பு
    X

    பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர்- சித்தராமையா அறிவிப்பு

    • முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
    • 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.

    2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் சில...

    * தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.

    * சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.

    * கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.

    * பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.

    * பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது.

    * பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.

    * கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

    Next Story
    ×