என் மலர்
இந்தியா

X
சந்திரசேகர் ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் சரமாரியாக வெட்டி கொலை
By
மாலை மலர்20 Feb 2025 12:04 PM IST (Updated: 20 Feb 2025 12:24 PM IST)

- தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.
- இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு ஒருநாள் முன்னதாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ராஜலிங்கமூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X