search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து.. 3 பேர் பலி - 50 பேர் மீட்பு - வீடியோ
    X

    குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து.. 3 பேர் பலி - 50 பேர் மீட்பு - வீடியோ

    • குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.

    குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.

    ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×