என் மலர்
இந்தியா

கோவிலில் இறைச்சி துண்டு: ஊரையே களேபரமாக்கிய சம்பவம்.. கடைசியில் தான் ட்விஸ்ட்

- சிவலிங்கம் அருகே மாமிசத்துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
- பாஜக கட்சியினர் இப்பிரச்னையை கையில் எடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தப்பாசபுத்ரா பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, கோவில் கமிட்டி உறுப்பினர்களுக்கு இதை பற்றி தெரிவித்துள்ளார்.
கோவிலுக்குள் இறைச்சி துண்டு இருந்ததாக பரவிய செய்தியை கேட்டதும் பாஜக கட்சியினர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தனர். இதனால் அபபகுதியில் மதரீதியான பிரச்சனை எழுமா என பொதுமக்கள் அஞ்சினர்.
இதனையடுத்து, சிவ லிங்கம் சிலை அருகே மாமிசத்துண்டு எப்படி வந்தது எனக் கண்டறிவதற்காக 4 குழுக்கள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, இது ஒரு பூனையின் வேலை எனத் தெரியவந்தது. இறைச்சி துண்டை கோவிலுக்கு உள்ளே பூனை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது.
బ్రేకింగ్ న్యూస్టప్పాచబుత్ర శివుని గుడిలో మాంసం ఘటనలో ట్విస్ట్మాంసం ముద్ద నోట్లో పెట్టుకొని గుడిలో పడేసిన పిల్లి pic.twitter.com/e2zNmBs3fQ
— Telugu Scribe (@TeluguScribe) February 12, 2025