என் மலர்tooltip icon

    இந்தியா

    எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதார சேவை வழங்குவதில் எந்த சமரசமும் கிடையாது: ஜே.பி. நட்டா
    X

    எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதார சேவை வழங்குவதில் எந்த சமரசமும் கிடையாது: ஜே.பி. நட்டா

    • நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை.
    • வாஜ்பாய் பிரதமராக இருந்துபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

    மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று மக்களவையில் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) திட்டத்தின்கீழ் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். என்றாலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரனமான சுகாதாரம் சேவை வழங்குவதில் எந்த சமரசமும் கிடையாது.

    நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது பிரதம்ர மோடி 22 எய்ம்ஸ் மருத்துவமனையை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டம் பயனாளி அடிப்படையில் விரிவடைந்து கொண்டே வருகிறது. தொடக்கத்தில் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட என்ற அடிப்படையில் 10.74 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் 10.74 கோடி குடும்பத்தில் இருந்து 12 கோடி குடும்பமாக உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள் 37 லட்சம் பேர் பயனடையும் வகையில் விரிவடைந்துள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    Next Story
    ×