என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9187855-modi.webp)
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
- 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு.
புதுடெல்லி:
இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது என்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும் கூறுகிறார்கள். இந்தியா அதன் சொந்த வளர்ச்சியை மட்டுமல்ல, உலகின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.
இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் 5 தூண்களில் நிற்கின்றன. நம்மிடம் வளங்கள், புத்திசாலித்தனமான மனம், பொருளாதார வலிமை, அரசியல் ஸ்திரத்தன்மை, மூலோபாய புவியியல், உலகளாவிய நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை உள்ளன. வளர்ச்சி பாரதத்துக்கு அடுத்த 2 தசாப்தங்கள் மிகவும் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் நாம் பல மைல்கற்களை அடையப் போகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. நமது சூரிய சக்தி உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கியுள்ளோம். இன்று இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. நமது புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் 3 மடங்காக அதிகரித்துள்ளது. பாரீஸ் ஜி-20 ஒப்பந்தங்களின் இலக்குகளை எட்டிய முதல் நாடு இந்தியா ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Addressing the opening ceremony of India Energy Week 2025 virtually, PM Modi says, "In the last 10 years, India has become the 5th largest economy and we have doubled our solar generation capacity. Today, India is the 3rd largest solar power-generating nation... Our… pic.twitter.com/jrIDmgHzRS
— ANI (@ANI) February 11, 2025