search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி
    X

    காஷ்மீரில் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி

    • தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
    • முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஜம்மு:

    காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு வருகிற 18, 25, அக்டோபர் 1-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

    தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. அதுபோல நேற்று முன்தினம் முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பாரதிய ஜனதா இன்று பிரசாரம் தொடங்குகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காஷ்மீர் செல்கிறார். இன்று பிற்பகல் 4 மணிக்கு அவர் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். நாளை அவர் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அவர் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட 3 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிய வந்து உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அந்த மாநிலத்துக்கு அறிவித்தார். தற்போது அவர் பிரசாரம் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×