search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா போராட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா போராட்டம்

    • வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும்.

    புதுடெல்லி:

    கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தினர்.

    வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து கூறும்போது 'வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது . இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்சனையை மக்களவையில் இன்று எழுப்புவேன்' என்றார்.

    Next Story
    ×