search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் அறிமுகம்
    X

    ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் அறிமுகம்

    • ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
    • புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அதன் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். புதிய கவர்னர் கையெழுத்திட்ட ரூ.50 நோட்டு அறிமுகம் செய்ததுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×