search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆர்.எஸ்.எஸ். வாழ்க்கையின் நோக்கத்தை கற்றுக்கொடுத்தது - பிரதமர் மோடி
    X

    ஆர்.எஸ்.எஸ். வாழ்க்கையின் நோக்கத்தை கற்றுக்கொடுத்தது - பிரதமர் மோடி

    • ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

    என்னுடைய குழந்தை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.

    எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×