search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இன்றும் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி
    X

    இன்றும் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி

    • நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது.
    • இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆகியவை கடும் சரிவை கண்டுள்ளன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1769 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 546 புள்ளிகள் சரிந்தன.

    நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 252.85 புள்ளிகள் சரிந்து 82,244.25 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏற்றம் கண்டது. பின்னர் ஏற்றம் இறக்கமாக இருந்தது. 9.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,339 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இன்று காலை 82,051.86 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தகம் ஆனது. அதிகபட்சமாக 82,649.16 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று 25250.10 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 68 புள்ளிகள் சரிந்து 25181.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தற்போது அதாவது 9.40 மணிக்கு 25191.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. இன்று காலை 25,094.85 புள்ளிகள் வரை குறைந்த வர்த்தம் ஆனது. அதிகபட்சமாக 25,287.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    Next Story
    ×