search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    காலையிலேயே சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை
    X

    காலையிலேயே சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

    • இந்திய பங்குச் சந்தை காலையிலேயே சரிவுடன் தொடங்கின.
    • நேற்றைய நாள் முடிவிலும் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கின. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 138 புள்ளிகளும் சரிவடைந்து வர்த்தகத்தை தொடங்கின.

    இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 379.79 புள்ளிகள் சரிந்து 73,735.38 புள்ளிகளையும், என்.எஸ்.இ. நிஃப்டி 108.40 புள்ளிகள் சரிந்து 22,351.90 ஆகவும் உள்ளது.

    இந்திய பங்குச் சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வங்கித் துறை, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி. துறைகளை சேர்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. நேற்றைய பங்குச் சந்தை சரிய தொடங்கும் முன் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதாக சந்தை வல்லுநரான ஜதின் ஜெடியா தெரிவித்தார்.

    Next Story
    ×