என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஆந்திர தலைநகராக திருப்பதியை மாற்றுவோம்- முன்னாள் மத்திய மந்திரி ஆந்திர தலைநகராக திருப்பதியை மாற்றுவோம்- முன்னாள் மத்திய மந்திரி](https://media.maalaimalar.com/h-upload/2024/02/04/2006851-chintamohan.webp)
ஆந்திர தலைநகராக திருப்பதியை மாற்றுவோம்- முன்னாள் மத்திய மந்திரி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
- ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார்.
அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு 3 தலை நகரங்கள் என அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3 தலை நகரங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதியை தலைநகராக மாற்றுவோம் என்றார்.