search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு- பாஜக
    X

    ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு- பாஜக

    • முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
    • இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

    Next Story
    ×