search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பயணியை மீட்ட பெண் காவலர்- வீடியோ
    X

    ஓடும் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பயணியை மீட்ட பெண் காவலர்- வீடியோ

    • பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர்.
    • ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    மும்பை:

    மும்பையில் கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரெயில் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று இந்த ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ரெயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அவரது ஆடை மற்றொரு பயணியின் பையில் சிக்கிக் கொண்டது. மேலும் ரெயில் வேகம் எடுத்த போது அந்த பெண் சமநிலை இழந்து நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டார்.

    இதை அங்கிருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ரூபாலி ஓடிச்சென்று, ஓடும் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பயணி ரெயில் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் அந்த பெண்ணை இழுத்தார். அப்போது பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர். உடனே அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெண் காவலர் ரூபாலி சரியான நேரத்தில் தைரியமாக செயல்பட்டு, ரெயிலில் சிக்கிய பெண் பயணியை காப்பாற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதைப்பார்த்த பலரும் பெண் காவலரின் தைரியத்தையும், துணிச்சலான செயலையும் பாராட்டி பதிவிட்டனர்.


    Next Story
    ×