என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சிறப்புக் கட்டுரைகள்
![அய்யாவாடி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி அய்யாவாடி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி](https://media.maalaimalar.com/h-upload/2024/01/05/1999906-14.webp)
அய்யாவாடி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆலயத்தில் தனி சன்னதியில் பிரத்யங்கிராதேவி அருள்பாலிக்கிறாள்.
- பிரத்யங்கிராதேவிக்கு யாகம் செய்து வழிபட்டால் வெற்றி தரக்கூடிய பலம் கிடைக்கும்.
கும்பகோணம் ஆலயங்களை வழிபட செல்லும் போது நிச்சயமாக திருநாகேஸ்வரம் செல்வீர்கள். ராகு-கேது தலங்களில் மிக சிறந்த தலமான இந்த தலத்துக்கு அருகில்தான் ஒப்பிலியப்பன் கோவிலும் இருக்கிறது. அதுபோல இந்த ஆலயங்களுக்கு அருகில் இன்னொரு அற்புதமான தலம் இருக்கிறது.
அது அய்யாவாடியில் இருக்கும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலயம் ஆகும். கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள மிக மிக பழமையான ஆலயங்களில் பிரத்யங்கிராதேவி ஆலயமும் ஒன்றாகும்.
உண்மையில் இது மிக சிறப்பான சிவாலயம் ஆகும். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்பாள் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தேவார பாடல் பெற்ற சிவதலங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் பிரத்யங்கிராதேவி அருள்பாலிக்கிறாள். வடக்கு திசை நோக்கி சிம்ம முகம், 18 கரத்துடன் சிரித்த முகத்துடன் பிரத்யங்கிரா தேவி காணப்படுகிறாள். தலையில் சந்திரன் அணிந்து, சூலம், பாசம் ஏந்தி இருக்கிறாள். அவளுக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
புராண வரலாறு காரணமாக இந்த தலத்து பிரத்யங்கிராதேவி புகழ் பெற்றவளாக மாறி இருக்கிறாள். இதனால் இந்த ஆலயத்தை பிரத்யங்கிராதேவி ஆலயம் என்றே அனைவரும் அழைக்கிறார்கள். பிரத்யங்கிராதேவியோடு இணைந்த இந்த ஆலயத்தின் தல வரலாற்றை தெரிந்து கொண்டால்தான் அவளது சிறப்பை நாம் உணர முடியும்.
பஞ்ச பாண்டவர்கள் கவுரவர்களிடம் தோற்று நாட்டை இழக்க நேர்ந்ததால் வனவாசம் சென்றனர். காடுகளில் சுற்றி திரிந்தனர். யார் கண்களிலும் தென்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக அடர்ந்த காடுகளுக்குள்ளும் சென்றனர். அந்த சமயத்தில் கொடிய விலங்குகள் தாக்கி விடுமோ என்று அச்சப்பட்டனர்.
காடுகளுக்குள் அலைந்ததால் அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு சரியான தூக்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும் என்று கதிகலங்கினார்கள். அப்போது பஞ்ச பாண்டவர்கள் 5 பேருக்கும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு இறையருள் கிடைத்தது.
இழந்த நாட்டை மீண்டும் மீட்க வேண்டுமானால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து பிரத்யங்கிராதேவியை வழிபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரத்யங்கிராதேவிக்கு யாகம் செய்து வழிபட்டால் வெற்றி தரக்கூடிய பலம் கிடைக்கும். தேவையில்லாத அச்சம் நீங்கும் என்று பாண்டவர்களிடம் கூறப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ பிரத்யங்கிராதேவியை வழிபட பஞ்ச பாண்டவர்கள் முடிவு செய்தனர். காடுகளுக்குள் செல்லும் இடங்களில் எல்லாம் பிரத்யங்கிராதேவி ஆலயம் உள்ளதா? என்று தேடினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கும்பகோணம் அருகே அவர்களுக்கு பிரத்யங்கிராதேவி அருள் கிடைத்தது.
கும்பகோணம் பகுதியில் இருந்த பஞ்ச பாண்டவர்களுக்கு சுயம்பு மூர்த்தியாக பிரத்யங்கிராதேவி காட்சியளித்தாள். இதனால் பாண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பிரத்யங்கிராதேவிக்கு உரிய முறையில் வழிபாடுகள் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பூக்களை சேகரிக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு பூக்கள் கிடைக்கவில்லை.
அப்போது அந்த பகுதியில் பிரமாண்டமாக நின்று கொண்டிருந்த ஆலமரம் பாண்டவர்களின் கண்களில் பட்டது. பூ கிடைக்காவிட்டால் பரவாயில்லை, ஆல மரத்தின் இலையை பறித்து அதையே வண்ண வண்ண பூக்களாக கருதி பிரத்யங்கிராதேவிக்கு சூட்டி வழிபடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஆலமரத்து இலைகளை பறித்து வந்து பிரத்யங்கிராதேவிக்கு பூஜை நடத்தினார்கள்.
பாண்டவர்களின் பூஜையால் மனம் மகிழ்ந்த பிரத்யங்கிராதேவி அவர்களுக்கு மன தைரியத்தையும் ஆற்றலையும் அள்ளி அள்ளி கொடுத்தாள். இதனால் பாண்டவர்கள் போரில் கவுரவர்களை வீழ்த்தி மீண்டும் தங்களது நாட்டை பெற்று ஆட்சி செய்தனர்.
பாண்டவர்கள் 5 பேரும் யாகம் நடத்தி பூஜைகள் செய்து பிரத்யங்கிராதேவி அருள் பெற்ற இடம் என்பதால் அந்த இடத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் பேச்சுவழக்கில் அய்யாவாடி என்று மாறி போனது. இந்த தலத்தில் இப்போதும் தல புராணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆல மரம் தலவிருட்சமாக இருக்கிறது.
இங்கு அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் மன தைரியும் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சனி தோஷம் உள்பட முக்கிய தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். இதனால் தமிழகத் தில் எந்த ஆலயத்திலும் இல்லாத படி இந்த பிரத்யங்கி ராதேவி ஆலயத்தில் நடக் கும் அமாவாசை வத்தல் யாகம் மிகவும் புகழ் பெற் றாக உள்ளது.
மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அசுர மன்னன் கிரண்யகசி புவை கொன்ற பிறகும் அவரது ஆவேசம் தணியாதபடி இருந்தது. அவரை கட்டுப்படுத்த சிவபெரு மான் புதுமையாக சிங்க முகம் மற்றும் கழுகு இறக்கைகளுடன் ஒரு அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்துக்கு சரபேஸ்வரர் என்று பெயர்
அந்த சரபேஸ்வரரின் இறக்குகளில் ஒன்றில் பிரத்யங்கிராதேவி அமர்ந்து மகா விஷ்ணுவின் உக்கிரத்தை தணித்ததாக வரலாறு உள்ளது. எனவே சக்தி அம்சங்களில் பிரத்யங்கிராதேவி மிக மிக சக்தி வாய்ந்தவள் என்று கருதப்படுகிறது. இதனால்தான் ஆதி காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்லும் போது பிரத்யங்கிராதேவியை வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்தி ருந்தனர்.
குறிப்பாக பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலை யாகம் என்ற ஒரு வகை யாகத்தை நடத்துவதை மன்னர்கள் கடை பிடித்து வந்தனர். மிக பிரமாண்டமான யாக குண்டங்களில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை போட்டு வழிபடுவது தான் நிகும்பலை யாகம் ஆகும். இந்த யாகம் நடத்துவது மன்னர்கள் காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து வருகிறது.
ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராமர் முயற்சி செய்தபோது ராவணன் அதை தடுத்து நிறுத்த இந்த யாகத்தை நடத்தியதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ராவணன் தனது சகோதரர்களில் ஒருவனும் மிக பலசாலியுமான இந்திரஜித்தை இந்த யாகத்தை நடத்த வைத்தான். இந்திரஜித் இந்த தலத்துக்கு வந்துதான் அந்த யாகத்தை மேற்கொண்டான்.
இதற்காக அவன் இந்த தலத்தின் 8 திசைகளிலும் மயான பூமியை தோற்றுவித்து நிகும்பலை யாகம் நடத்தியதாக குறிப்புகள் உள்ளன. இதை அறிந்ததும் ராமனும் பிரத்யங்கிரா தேவி அருள் வேண்டி அதே நிகும்பலை யாகத்தை நடத்தினார். இருவரும் போட்டி போட்டு யாகம் நடத்தினாலும் பிரத்யங்கிராதேவி ராமனுக்கே உதவி செய்தாள்.
இந்திரஜித் வெற்றி பெற அருள் பாலிக்கவில்லை. இதனால்தான் ராமன் கூடுதல் பலம் பெற்றதாக சொல்வார்கள். இந்த தலத்தில் இந்திரஜித் மயானம் அமைத்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போதும் அங்கு ஆலயம் அருகே மயான பூமி இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரத்யங்கிராதேவிக்கு நடத்தப்படும் நிகும்பலை யாகம் என்பது மிக மிக ஆற்றல் வாய்ந்தது.
இந்த யாகத்தில் கலந்து கொண்டதால் பஞ்சபாண்டவர்கள் இழந்த நாட்டை மீட்டது போல நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்களோ அவை அனைத்தையும் பெற முடியும். குறிப்பாக இந்த யாகத்தில் கலந்து கொண்டு வத்தல் வழங்கினால் எதிரிகள் தொல்லை அடங்கும். கடன் தொல்லை தீரும். பதவி உயர்வு வேண் டும் என்பவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும்.
வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் இந்த யாகத்தில் பங்கேற்க வேண்டும். ஏராளமான வியாபாரிகள் நிகும்பலை யாகம் செய்து லாபம் பெற்று வருகிறார்கள். திருமண தடை நீக்கும் ஆற்ற லும் இந்த யாகத்துக்கு உண்டு. இந்த யாகம் நடக்கும் போது 108 வகை பொருட்களும் சேர்ப்பார்கள். சனி பகவானின் மகன் குளிக்கன் இந்த யாகம் செய்து பலன் பெற்று இருப்பதால் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்று தோஷ நிவர்த்தி பெற முடியும்.
சமீப காலமாக நிகும்பலை யாகம் மிகவும் புகழ் பெற்றுள்ளது. அமாவாசை நாட்களில் அய்யாவாடி தலத்தில் நடக்கும் யாகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கி றார்கள். தமிழகம் முழுவதும் இருந்து இந்த ஆலயத்துக்கு வந்து செல்கிறார்கள். இத்தகைய சிறப்புடைய இந்த ஆலயத்துக்கு கும்பகோணம் யாத்திரையின்போது தவறாமல் செல்லுங்கள்.
இந்த ஆலயத்துக்கு செல்வதற்காக நீங்கள் சிரமப்பட தேவையில்லை. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஒப்பிலியப்பன் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் திருநாகேஸ்வரம், ஒல்லியப்பன் தலங்களுக்கு பிறகு அய்யாவாடி தலத்துக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். பவுர்ணமி, அமாவாசை தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த தலத்தில் புத்திர தீர்த்தம் அமைந்துள்ளது. அதில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பானது. தினமும் இந்த தலத்தில் 4 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்தி ருக்கும். அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் நியாய மான கோரிக்கைகளுக்கு உடனே வெற்றி தரும் திருபுவனம் ஆலயம் பற்றி பார்க்கலாம். திரு புவனம் சரபேஸ்வரர் மிக மிக சக்தி வாய்ந்த வர். அது எப்படி என்பதை அடுத்த வாரம் காணலாம்.