search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே இந்திய வீரர் பிரனாய் அதிர்ச்சி தோல்வி
    X

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே இந்திய வீரர் பிரனாய் அதிர்ச்சி தோல்வி

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
    • மற்றொரு இந்திய வீரரான லக்‌ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.

    பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் டோமா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே பிரனாய் வெளியேறியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். அந்த போட்டி மாலை 6.25 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×