search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    • சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
    • 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.

    அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

    • 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

    அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.

    அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.

    இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார்.
    • பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    காவ்யா மாறனுக்காக மிகவும் வருந்துகிறேன்.. ஐதராபாத் அணியின் தோல்வி குறித்து அமிதாப் பச்சன் சொன்னது இதுதான்

     நேற்று (மே 26) நடந்த ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 3 வது முறையாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கிடையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கேமராவிற்கு எதிர்புறம் திருப்பியபடி கண்ணீர் விட்டு அழுதார்.

    கண்ணீரை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களுக்குக் கைதட்டி வரவேற்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    அவர் நடத்திவரும் பிளாகில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து குறிப்பிட்ட அவர், "எஸ்ஆர்ஹச் அணி தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஸ்டேடியத்தில் தோல்விக்குப் பிறகு எஸ்ஆர்ஹச் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரில் விட்டார். கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பி, தனது கண்ணீரை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருடத்தப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

     

     

    தொடர்ந்து அந்த பதிவில் அவர், "பரவாயில்லை..மை டியர், தோல்வியில் மனத்தைத் தளரவிட்டுக்கொடுக்காதே நாளை மற்றொரு நாளே!" என்று ஆறுதல் கூறியுள்ளார். 

     

     

    • BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.
    • மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.

     

    அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.

     

    வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.

    கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர். 

    • இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின.
    • மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் மகளிர் ஐபிஎல் 2024 மற்றும் ஆடவர் ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    அதேபோல ஆடவர் ஐபிஎல் தொடரில் இந்திய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் இடம்பெற்றிருந்தார். இரு தொடர்களிலும் இந்திய கேப்டன்களே கோப்பை வென்று அசத்தினர்.

    மேலும் இரு தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இரு ஆஸ்திரேலிய கேப்டன்கள் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அப்படி முதலில் ஆடிய இரு அணிகளும் 10.3 ஓவரில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய கேப்டன்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு தொடர்களிலும் 4 விஷயங்கள் ஒற்றுமையாக உள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.

    • நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
    • பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்

    ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.

    நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

     

    • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

    அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதிபோட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் சென்னை - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 125 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ரன்களாக இருந்தது. அதனை தற்போது ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.

    இறுதிப்போட்டியில் குறைந்த பட்ச ரன்கள் எடுத்த அணிகள் விவரம்:-

    113 ஐதராபாத் vs கொல்கத்தா - சென்னை 2024 *

    125/9 சென்னை vs மும்பை - கொல்கத்தா 2013

    128/6 புனே vs மும்பை - ஐதராபாத் 2017

    129/8 மும்பை vs புனே - ஹைதராபாத் 2017

    • ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். தொடக்கமே ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    அபிஷேக் 2 ரன்னிலும் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த திருப்பாதி முதலில் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சொதப்பிய அவர் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும் மார்க்ரம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த ஷபாஷ் அகமது 8 ரன்னிலும் அப்தும் சமாத் 4 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த கிளாசனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
    • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

    இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    ×