search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    கோலி கோரிக்கை எதிரொலி: வீரர்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லலாம்.. விதிகளை தளர்த்தும் பிசிசிஐ?
    X

    கோலி கோரிக்கை எதிரொலி: வீரர்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லலாம்.. விதிகளை தளர்த்தும் பிசிசிஐ?

    • தொடர் தோல்வியையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
    • இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பத்தை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்றாக வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று கூறியது.

    இதனைப் போலவே தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துபாய் பயணம் செய்த இந்திய அணி, வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி அந்த விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என சில முக்கிய விஷயங்களை கூறினார்.

    அதில், எந்த வீரையாவது உங்களின் குடும்பம் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள். போட்டி முடிந்த பிறகு நான் என் ரூமுக்கு சென்ற தனியா சோகமாய் இருக்க விரும்பல. நான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×