search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    சேப்பாக்கத்தில் ரோகித் சர்மா: ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார்
    X

    சேப்பாக்கத்தில் ரோகித் சர்மா: ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார்

    • சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டி ஞாயிறு இரவு நடைபெறுகிறது.
    • இன்று இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.

    ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    தீவிர வலைப் பயிற்சிக்கு இந்தியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா, தீவிர வலைப்பயிற்சிக்குப் பின், அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

    Next Story
    ×