என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ரசிகர்களுக்கு டபுள் குதூகலம்: RR Vs CSK போட்டியில் நடன விருந்து தரும் நடிகை சாரா அலிகான்
    X

    ரசிகர்களுக்கு டபுள் குதூகலம்: RR Vs CSK போட்டியில் நடன விருந்து தரும் நடிகை சாரா அலிகான்

    • ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    • கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Next Story
    ×