என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேப்டனாக ரோகித் தொடர பிசிசிஐ அனுமதி?
    X

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேப்டனாக ரோகித் தொடர பிசிசிஐ அனுமதி?

    • இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.
    • இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜூன் 20-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவே தொடர பிசிசிஐ அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதையடுத்து அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் நீடிக்கமாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

    Next Story
    ×