search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
    • இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

    ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தற்போது பதக்க பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

    33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்திலும், 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளது.

    இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளது.

    அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 59-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.

    • நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது.
    • 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 27-ந் தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது.

    இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    வெற்றிகரமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது. 15-வது நாளான இன்று 39 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது. ரோடு சைக்கிளிங், மல்யுத்தம் (தலா 3 தங்கம்), தடகளம், வாட்டர் போலோ, கூடைப்பந்து, ஹேண்ட்பால், மாடர்ன் பெண்டத்லான், கைப்பந்து, பளு தூக்குதல் (தலா 1 தங்கம்) ஆகிய விளையாட்டுக்கள் கடைசி நாளில் நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்று சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் , ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெறும் 10 மணி நேரமே இருந்த நிலையில் அவரின் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டார்
    • பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அமனின் எடை எடை 3.6 கிலோ குறைந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

     

    முன்னதாக நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தார். எனவே அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளார் அமன் ஷெராவத்.

    பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகரித்துள்ளதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. எனவே  மல்யுத்தத்தில் இந்தியாவின் கடைசி பிரிவில் பிறகு இந்த வருட ஒலிம்பிக்ஸ்  மல்யுத்தத்தில் இந்தியாவுக்கான கடைசி நம்பிக்கையாக இருந்த அமன் பதக்கத்தை வென்றெடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் கவனம் பெற்றுள்ளது.

    நேற்று முன் தினம் இரவு நடத்த போட்டியின்போது அமன் ஷெராவத்தின் எடை 61.5 கிலோ ஆக இருந்தது. எனவே இறுதிப்போட்டிக்கு முன்னர் சுமார் 4.6 கிலோவைக் குறைக்க அமனிடம் வெறும் 10 மணி நேரமே இருந்த நிலையில் அவரின் எடையைக் குறைக்க கடுமையான முயற்சிகளில் அவரை பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தினர்.

    ஒன்றை மணி நேரம் கோச்களுடன்  மல்யுத்த பயிற்சி, ஒரு மணி நேரம் சூடான நீரில் குளியல், நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஜிம்மில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் ட்ரெட்மில்லில் ஓட்டம், அதன்பின் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு, 5 முறை நீராவிக் குளியல் என பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அமனின் எடை எடை 3.6 கிலோ குறைந்தது. தொடர்ந்து மசாஜ் , ஜாகிங், ரன்னிங், என காலை 4.30 மணியளவில் அமனின் மொத்த எடை 56.9 ஆக குறைந்தது.

     

    அதாவது அதிகபட்ச எடையான 57 கிலோவுக்கு 100 கிராம் குறைவாகவே தனது எடையைக் கொண்டுவந்துள்ளார் அமன். இந்த மொத்த பயிற்சிக்கு இடையில் அமன் மற்றும் அவர்து பயிற்சியாளர்கள் தூங்கவே இல்லை. இடையிடையில், லெமன் கலந்த நீர், தேன், சிறிதளவு காப்பி மட்டுமே அமனின் அப்போதைய உணவு. இவை வழக்கமாக இருந்தாலும், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் தங்களை மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாக அமனின் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது
    • இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்ததாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு பெற உள்ளது.

    அந்த வகையில், பாலின சர்ச்சைக்கு ஆளான அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் நேற்று  நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

     

     

    முன்னதாக 66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது.

    இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இமானேவுக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது. உலகம் முழுவதிலும் பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 'அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர்'
    • 'தனது தாய், அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார்'

    பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று முன் தினம் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான் என்று தெரிவித்திருந்தார் 

    பாஸ்கிதானும் இந்தியாவும் எதிரிகள் என்ற பொதுப்படையாக இந்தியர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் மனநிலையில் இருந்து விலகி நீரஜின் தாய் கூறியிருந்த இந்த கருத்து அனைவரையும் கவர்ந்தது.

     

    இந்நிலையில் தனது தாய் அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பாரீசில் வைத்து செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், எனது தாய் கிராமத்தில் வாழ்கிறார், தொலைக்காட்சிகளோ, சமூக வலைதளமோ, செய்திகளோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பின்புலம் கொண்ட கிராமம் அது.

    [பொதுவெளியில் இருக்கும்] இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் குறித்து அவருக்கு தெரியாது. அவர் ஒரு தாயாக மட்டுமே தன்னை உணர்கிறார். எனவே தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக அவர் பேசியுள்ளார். தாயின் ஸ்தானத்தில் இருந்து அவர் இதைப் பேசினார். இது சிலருக்கு விநோதமாகத் தோன்றலாம். சிலர் இதை விரும்பியும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா[ Khandra] கிராமத்தைச் சேர்த்தவர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் நாதீமின் தாயும் நீரஜ் சோப்ராவும் தனது மகன் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

     

    • 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

    அப்போது, ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து, அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.

    • இந்தியா 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.
    • ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    பாரிஸ்:

    2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைய உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் சில போட்டிகளே மீதம் உள்ளன. அவற்றிலும் பதக்கம் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

    ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். இதுவரை இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.

    அதே சமயம் பாகிஸ்தான் இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே வென்று உள்ளது. வேறு எந்த பதக்கமும் வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பாகிஸ்தான் பதக்கப் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ளது.

    மொத்தமாக 5 முதல் 7 பதங்கள் வாங்கிய நாடுகள் கூட ஒரே ஒரு தங்கம் பதக்கம் வாங்கிய பாகிஸ்தானுக்கு பின்னால் தான் இருக்கிறது.

    இந்தியா இனி தங்கப் பதக்கம் வென்றால் மட்டுமே பாகிஸ்தானை முந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு கோல்ஃப், ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஒரு போட்டி மற்றும் மகளிர் மல்யுத்தத்தில் 76 கிலோ எடை பிரிவு போட்டி ஆகியவை மட்டுமே மீதமுள்ளன. இவை எதிலும் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

    தற்போது ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலத்துடன் மொத்தம் 103 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் சீனா 29 தங்கம், 25 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்று உள்ளது. 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்றுள்ளது.

    • இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் 1-1 என சமனிலையில் முடிந்தது.
    • வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து 3-1 என வென்றது.

    பாரீஸ்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.

    இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    • ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர்.
    • பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    பாரிஸ்:

    2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டு முறை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை வீசி மாபெரும் சாதனை படைத்தார்.

    ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர். நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் என்பவர் 90.57 மீட்டர் தூரம் வீசியதே இதுவரை ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த இறுதிப் போட்டியில் இரண்டு முறை அர்ஷத் நதீம் முறியடித்தார். தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனையை உடைத்தார். பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். ஹர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


    இதனையடுத்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அர்ஷத் நதீம் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை உடம்பில் சுற்றிகொண்டு உலா வந்தார். மேலும் அவரது பயிற்சியாளரை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஒலிம்பிக் நிறைவு விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் மனு பாக்கர் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்திய தேசிய கொடி ஏந்துகின்றனர்.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.

    இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியா தேசியக்கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    • நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை.
    • ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.55 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லெவரோன் சிட்னி மெக்லாக்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 50.37 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவர் 50.65 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து மெக்லாக்லின் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெல் 51.87 வினாடியில் கடந்து வெள்ளியும், நெதர்லாந்தை சேர்ந்த பெமே போல் 52.15 வினாடியில் கடந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    உலகின் அதிவேக வீரரான அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 19.70 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.

    போஸ்ட்வானாவை சேர்ந்த டெபேகோ 19.46 வினாடியில் கடந்து தங்கப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் கென்னத் பெட்னரிக் 19.62 வினாடியில் கடந்து வெள்ளியும் பெற்றனர்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேர்லேவே 12.99 வினாடியில் கடந்த தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் டேனியல் ராய்ட்ஸ் (13.09 வினாடி) வெள்ளியும், ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை தாரா டேவில் 7.10 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜெர்மனி, அமெரிக்காவுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    ×