என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
- 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
- உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.
உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.
லண்டன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நாளை மோதுகிறார்.
நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக் குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் மோதுகிறார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பிரிட்ஸ் பெறும் 3-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
- இதில் கனடா வீராங்கனை ஆனி பெர்னாண்டஸ் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலி ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா, கனடா வீராங்கனை லைலா ஆனி பெர்னாண்டசுடன் மோதினார்.
இதில் கசட்கினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் என்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.
இதில் பவுலினி 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதன்மூலம் கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கசட்கினா, கனடா வீராங்கனை ஆனி பெர்னாண்டசுடன் மோத உள்ளார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடா வீராங்கனை
லைலா ஆன்னி பெர்னாண்டசுடன் மோதினார்.
இதில் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், சீனாவைச் சேர்ந்த ஷாங் ஜங்செங்குடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகியுடன் மோதுகிறார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, இங்கிலாந்து வீராங்கனை கேடி போல்டருடன் மோதினார்.
இதில் பவுலினி 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெர்லின் ஓபன் சாம்பியனான பெகுலா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை சந்தித்தார்.
இதில் எம்மா ரானுகாடு 4-6, 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜெசிகா பெகுலா சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 6(21)- 7(23) என இழந்தது.
- 2-வது செட்டை 4-6 என இழந்து தோல்வியை தழுவியது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி காலிறுதியில் அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
முதல் செட்டில் இரண்டு ஜோடிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் மாறிமாறி கேம்ஸை கைப்பற்றினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்க ஜோடி 23-21 என தனதாக்கியது. இதனால் முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6(21)- 7(23) என இழந்தது.
2-வது செட்டை 4-6 என இழக்க நேர்செட்டில் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு காலிறுதியில் ஜே.கேஷ்- ஆர்.காலோவே ஜோடி 6-1, 6-2 என மார்ட்டினேஸ்- முனார் ஜோடியை வீழ்த்தியது.
- யூகி பாம்ப்ரி ஜோடி ஸ்ரீராம் பாலாஜி ஜோடியை 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியது.
- நாளை காலிறுதியில் அமெரிக்க ஜோடியை எதிர்கொள்கிறது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி மற்றொரு இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.
பாம்ப்ரி ஜோடி 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி- ஆலிவெட்டி ஜோடி அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
- போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஹிஜிகட்டா 6-2, 2-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஸ்பெயின் நாட்டில் மல்கோர்கா சாம்பியன்ஷிப் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்ட் ஆஃப் 32-ல் இத்தாலி வீரர ஃபேபியோ ஃபோக்னினி நெர்தலாந்து வீரர் கிஜ்ஸ் பிரவ்வெர்-ஐ எதிர்கொண்டார்.
இதில் போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டு செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டா இத்தாலியின் லூகா நர்டியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஹிஜிகட்டா 6-2 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த நர்டி அந்த செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர். என்றாலும ஹிஜிகட்டாவின் கையே ஓங்கியது. அவர் 7-5 என கடும் போராட்டத்திற்குப்பின் 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்