search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்குடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் இரு செட்டை 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றினார். 3-வது செட்டை டேனியல் 7-6 (7-2) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 4-வது செட்டை 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-1), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று ஒசாகாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பொடோ ரோஸ்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்

    மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
    • கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதையடுத்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார்.

    இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

    முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார்.

    உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

    என்று நடால் கூறினார்.

    • பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும்.
    • அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை ஜியான்ஜியானை (பிரான்ஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஊதித்தள்ளினார். பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    இதே போல் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சச்சியா விக்கெரியை (அமெரிக்கா) வெளியேற்றினார். தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலியா அவ்டீவாவை (ரஷியா) விரட்டினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), லேலா பெர்னாண்டஸ் (கனடா), சம்சோனோவா (ரஷியா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    • ‘களிமண் தரையின் ராஜா’ என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர்.
    • 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடாலை (ஸ்பெயின்) சந்தித்தார். காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நடால் தற்போது உலக தரவரிசையில் 275-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள அவருக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு ஆட்டமாக இது அமைந்தது.

    'களிமண் தரையின் ராஜா' என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர். ஆனால் இந்த முறை அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லை. ஓரளவு ஈடுகொடுத்து ஆடினாலும் நேர் செட் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 3 மணி 5 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    நடாலின் ஆட்டத்தை நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோரில் நேரில் கண்டுகளித்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் எபாங்சை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் அவர் உள்ளூர் நாயகன் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எதிர்கொள்கிறார். இதே போல் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (9-7), 6-4, 6-1 என்ற செட்டில் மார்டோன் புசோவிக்சை (ஹங்கேரி) சாய்த்தார்.

    இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான 95-ம் நிலை வீரரான சுமித் நாகலின் சவால் முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. அவரை கரென் கச்சனோவ் (ரஷியா) 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 1-6 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதுகிறார்.

    ×