search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
    • இதில் அமெரிக்காவின் டியாபோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவுடன் மோதினார். இதில் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் கோகோ காப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன்பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார்.

    சுமார் 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டான் ஈவான்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.

    இதில் சிர்ஸ்டி முதல் செட்டை வென்றார். 2வது செட்டை ரிபாகினா போராடி கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சிர்ஸ்டி வென்றார்.

    இறுதியில், சிர்ஸ்டி 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் எலீனா ரிபாகினா இத்தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் - கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
    • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.

    இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
    • 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-வது வரிசையில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெரு நாட்டை சேர்ந்த வாரிலாசை தோற்கடித்தார்.

    பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரும், 5-வது வரிசையில் உள்ள வருமான கேஸ்பர் ரூட் (நார்வே) மற்றும் 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    சீனாவை சேர்ந்த ஜாங் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற கணக்கில் கேஸ்பர் ரூட்டையும், சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்டிக்கர் 7-5, 6-7 (2-7), 6-7 (5-7), 7-6 (8-6), 6-3 என்ற கணக்கில் சிட்சிபாசையும் போராடி வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டாரியா சேவிலியை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற 2-வது சுற்று போட்டிகளில் 4-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), 6-வது வரி சையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
    • கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் வெளியேறினார்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலாந்து) 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரெபக்கோ பீட்டர்சனை (சுவீடன்) 58 நிமிடங்களில் வீழ்த்தினார்.

    தொடர்ந்து, ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் வெளியேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் (ஆஸ்திரியா), 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • கடந்த மாதம் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரசிடம் போராடி வீழ்ந்த ஜோகோவிச் அதற்கு சின்சினாட்டி ஓபன் இறுதி சுற்றில் பழிதீர்த்தார்.
    • ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடும் பட்சத்தில் புதிய சாதனை படைப்பார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரசுக்கும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா) இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் கடந்த முறை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜோகோவிச் 2 ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் களம் காணுகிறார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலியான ஜோகோவிச் முதல் சுற்றில் 85-ம் நிலை வீரர் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) சந்திக்கிறார். முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெற்றாலே தரவரிசையில் மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறி விடுவார்.

    3 முறை சாம்பியனான ஜோகோவிச் கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும், அல்காரசும் நேருக்கு நேர் மல்லுக்கட்டலாம். கடந்த மாதம் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரசிடம் போராடி வீழ்ந்த ஜோகோவிச் அதற்கு சின்சினாட்டி ஓபன் இறுதி சுற்றில் பழிதீர்த்தது நினைவிருக்கலாம். 36 வயதான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடும் பட்சத்தில், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

    20 வயதான அல்காரசுக்கு இந்த முறை போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. முதல் சுற்றில் ஜெர்மனியின் டொமினிக் கோப்பெருடன் மோதும் அவர் அனேகமாக கால்இறுதியில் 6-ம் நிலை யானிக் சின்னெரையும் (இத்தாலி), இந்த தடையை கடந்தால் அரைஇறுதியில் 3-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவையும் (ரஷியா) சந்திக்க வேண்டியது வரலாம். ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), ஹர்காக்ஸ் (போலந்து)., கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் டாப்-6 இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. இதே போல் சமீபத்தில் விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றி கவனத்தை ஈர்த்த வோன்ட்ரோசோவா, பெட்ரா கிவிடோவா, கரோலினா முச்சோவா (3 பேரும் செக்குடியரசு), கசட்கினா (ரஷியா), அஸரென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) உள்ளிட்டோர் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    நடப்பு சாம்பியனான ஸ்வியாடெக் தனது முதல் சுற்றில் சுவீடனின் ரெபக்கோ பீட்டர்சனுடன் களம் இறங்குகிறார். சபலென்கா முதல் ரவுண்டில் ஜனிஸ்காவுடன் (பெல்ஜியம்) மோதுகிறார். அண்மையில் சின்சினாட்டி ஓபனை வென்றதால் கூடுதல் உற்சாகத்துடன் கால்பதிக்கும் உள்ளூர் புயல் கோகோ காப் தனது சவாலை லாரா சீஜ்மன்டுடன் (பெல்ஜியம்) தொடங்குகிறார். கோகோ காப் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோத வாய்ப்புள்ளது.

    இந்தியர்களை பொறுத்தவரை ஒற்றையர் பிரிவில் யாரும் தகுதி பெறவில்லை. ஆண்கள் இரட்டையரில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் ஜோடி சேர்ந்து களம் இறங்குகிறார். யுகி பாம்ப்ரி, மார்செலோ டெமோலினருடனும் (பிரேசில்), சகெத் மைனெனி, அஸ்லான் கரட்செவுடனும் (ரஷியா), ஜீவன் நெடுஞ்செழியன், ஜான் பேட்ரிக் சுமித்துடனும் (ஆஸ்திரேலியா) கைகோர்த்துள்ளனர்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.536 கோடியாகும். கடந்த ஆண்டை விட இது 8 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.24¾ கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியையும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும், வீரர், வீராங்கனைக்கு ரூ.12½ கோடி பரிசாக வழங்கப்படும். மேலும் முதல் சுற்றில் தோற்றால் கூட அந்த வீரர், வீராங்கனை ரூ.67 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்லும் ஜோடிக்கு ரூ.5¾ கோடி கிட்டும்.

    இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்2, சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், ஸ்வியாடெக், கோகோ கோப், சிட்சிபாஸ், ரைபகினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் விளையாடுகிறார்கள்.

    ×