search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி: உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்
    X

    இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி: உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்

    • கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது52). தொழிலாளியான இவர் சாலமரத்துப்பட்டி பகுதியில் இருந்து சந்தூர் நோக்கி செல்ல அரசு பஸ்சில் கும்மனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கினார்.

    அப்போது ஊத்தங்கரை பகுதியில் இருந்து ஓலைப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாகரத்தியாகவும் ஓட்டி வந்து கிருஷ்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    உயிரிழந்த நிலையில் இறந்த கிருஷ்ணன் என்பவர் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இரு சக்கர வாகனத்தை ஓட்டியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊத்தங்கரை-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களிடம் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகன ஓட்டி ராகுல் காந்தி (32) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில அடைத்தனர்.

    இதேபோன்று அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணனின் உறவினர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×