search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் செந்தில் பாலாஜி
    X

    அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் செந்தில் பாலாஜி

    • செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.
    • சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவுக்கு சென்றார்.

    பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து மெரினா சென்ற செந்தில் பாலாஜி அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×