என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வெங்கல் அருகே பேருந்து டயர் பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்றதால் பயணிகள் அவதி
Byமாலை மலர்14 Jan 2023 5:49 AM GMT
- பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- ஆவடியில் இருந்து ஆரணி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இருந்து ஆரணி வரையில் தடம் எண்: 580 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பேருந்துகளில் பெரும்பான்மையானவை பழுதடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற தடம் எண்: 580 பேருந்து ஒன்று வெங்கல் அருகே வந்தபோது இடது புற முன் பக்க டயர் பஞ்சர் ஆகி நடு ரோட்டில் நின்று விட்டது. இதனால் இந்த பேருந்தில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், இவர்கள் காத்திருந்து மற்றொரு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பழுது நீக்கி சீராக இயக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X