என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்: அமைச்சர்கள் வரவேற்பு வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்: அமைச்சர்கள் வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/02/07/2007460-mkstalin.webp)
வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்: அமைச்சர்கள் வரவேற்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
- சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
சென்னை:
பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.