search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
    X

    கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

    • துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் கருணாசின் பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • விமான பாதுகாப்பு விதிமுறைகள்படி துப்பாக்கி குண்டுகளை எடுத்து செல்வது தவறு எனக்கூறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    திரைப்பட நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லவிருந்த கருணாசின் உடமையை அதிகாரிகளை சோதனை செய்தனர். அப்போது, கருணாசின் உடைமைகளை சோதனை செய்தபோது வெடிபொருள் இருப்பதாக அலாரம் அடித்ததால் உடனடியாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40துப்பாக்கி குண்டுகள் இருந்தது.

    துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் கருணாசின் பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அவசரமாக வந்ததால் பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் பெட்டியை கவனிக்கவில்லை என்றும் தன்னிடம் உள்ள துப்பாக்கிக்கான புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸ் ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    இருப்பினும் விமான பாதுகாப்பு விதிமுறைகள்படி துப்பாக்கி குண்டுகளை எடுத்து செல்வது தவறு எனக்கூறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×