என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஆவடியில் ஏரி நிரம்பி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது ஆவடியில் ஏரி நிரம்பி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது](https://media.maalaimalar.com/h-upload/2022/11/12/1790837-avadid.jpg)
X
ஆவடியில் ஏரி நிரம்பி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது
By
Suresh K Jangir12 Nov 2022 2:38 PM IST (Updated: 12 Nov 2022 2:38 PM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.
- ஏரி நிரம்பி உபரி நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து உள்ளது.
ஆவடி:
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.இந்த நிலையில் ஆவடியிலுள்ள கோவில்பதாகை ஏரி 570 ஏக்கர் பரப்பளவில் நீர் நிறைந்து காணப்படுகிறது.
இந்த ஏரி நிரம்பி உபரி நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து உள்ளது.இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கணபதி நகர் பகுதி வழியாக உபரி நீரானது வெளியேறுவதால் அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது.
Next Story
×
X