search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரிப்பு

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் நீடித்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 558 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,169 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 100.85 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×