search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    4 மாவட்டங்களை துரத்தும் ரெட் அலர்ட்
    X

    4 மாவட்டங்களை துரத்தும் "ரெட் அலர்ட்"

    • 90 சதவீதம் மழை பெய்யும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.
    • ரெட் அலர்டுக்கு மேலான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.

    சென்னை:

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.

    * தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.

    * நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும்.

    * தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * தற்போதைய மழைக்கான காரணம் மேகவெடிப்பு இல்லை.

    * வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை.

    * 90 சதவீதம் மழை பெய்யும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.

    * ரெட் அலர்டுக்கு மேலான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.

    * வரும் காலங்களில் கனமழை அடிக்கடி பெய்யும்.

    * கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.

    * வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 5 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×