என் மலர்
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள்...
- தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார்.
இப்பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்...
* கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பேருந்து முனையம் திறப்பு.
* 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.
* 14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
* தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
* முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
* 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
* மருத்துவமனை, 4 உணவகங்கள் உள்ளிட்ட 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
* பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் அறைகள், 540 கழிப்பறைகள், ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன.
* 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.