search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வேலூர் ஜெயிலில் போலீசார் திடீர் சோதனை
    X

    வேலூர் ஜெயிலில் போலீசார் திடீர் சோதனை

    • ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
    • ஜெயில் காவலர்களையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஜெயிலில் தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் வேலூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, கருணாகரன், சாஹிப் மற்றும் 72 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 'திடீர்' சோதனை நடத்தினர்.

    முதலில் கைதிகள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த அறைகளை போலீசார் சோதனையிட்டனர். கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பி விட்டு அவர்களின் அறைகள் மற்றும் கழிவறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறையில் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயில் காவலர்களையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.

    அதே நேரத்தில் பெண்கள் ஜெயிலிலும் சோதனை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×