search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

    • கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரிய நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×