search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாதீபத்தையொட்டி ராட்சத எந்திரங்களைக்கொண்டு சுத்தப்படுத்தப்படும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்
    X

    ராட்சத எந்திரம் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி நடந்து வரும் காட்சி.

    மகாதீபத்தையொட்டி ராட்சத எந்திரங்களைக்கொண்டு சுத்தப்படுத்தப்படும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்

    • கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    7-ம் நாள் அன்று மகா தேரோட்டமும் 10-ம் நாள் டிசம்பர் 6-ந் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.

    இதுவரைக்கும் இப்பணியை செய்ததில்லை இப்போதுதான் முதல்முறையாக செய்கின்றனர்.

    மத்திய சென்னை மண்டலத்தில் இருந்து மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையிலான 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×