search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்
    X

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை.
    • உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×